பேருந்து வசதி தேவை.

Signatures:
  0 (Goal: 50)

Petitioning: பேருந்து வசதி தேவை. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Petitioner: Rajadurai Selvaraj started on October 19, 2016

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டம்,பேரூர் மதுரா மேட்டுக்குப்பம், பேரூர். 608701.ஐயா, நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியிலிருந்து எண்ணற்ற மாணவர்கள்,இளைஞர்கள் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் படிப்பு மற்றும் வேலை செய்து வருகிறார்கள்.தினந்தோறும் இரவு 10:00 மணியளவில் சேத்தியாத்தோப்பிலிருந்து வடலூர், நெய்வேலி, வழியாக சென்னை வரை ஒரு பேருந்து செல்கின்றது. அப்பேருந்தினை கானூர் வரை நீட்டிக்க வேண்டும். அதிமட்டுமில்லாமல் பகல் நேரத்தில் திருமுட்டத்திலிருந்து நாச்சியார்ப்பேட்டை, பேரூர்,கானூர், குமாரக்குடி, சேத்தியாத்தோப்பு, வழியாக சென்னை வரை புதிய வழித்தடம் துவங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் கீழ்க்கண்ட ஊர் பொதுமக்கள் பயன் பெறுவார்கள். நாச்சியார்ப்பேட்டை, கானூர்,சத்தாவட்டம், கூடலையாத்தூர், காவாலக்குடி,முடிகண்டநல்லூர், பேரூர்,வலசக்காடு,சாந்திநகர், மழவராயநல்லூர், குமாரக்குடி,குறிஞ்சிக்குடி ஆகிய ஊர் பொதுமக்கள் பயன் பெறுவார்கள். வெளியூரில் வேலை செய்பவர்கள் சொந்த ஊரிலிருந்து உணவு பொருட்கள் எடுத்து செல்லவும் ஏதுவாக இருப்பதோடு, பொதுமக்கள் சிரமம் குறையும்.திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் கூட்ட நெரிசலிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.கர்ப்பிணி, மூதியோர்,மற்றும் மேல்சிகிச்சைக்காக வெளியூர் செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Attached Video